-
2 நாளாகமம் 21:18-20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 இதற்குப் பிறகு, யெகோவா அவரைத் தண்டித்ததால், யோராமின் குடலில் தீராத நோய் வந்தது.+ 19 சில காலத்துக்குப் பின்பு, அதாவது இரண்டு வருஷங்களுக்குப் பின்பு, அந்த நோயால் அவருடைய குடல்கள் வெளியே வந்தன. அவர் கடைசிவரை பயங்கரமாகக் கஷ்டப்பட்டு இறந்துபோனார். வாசனைப் பொருள்களை எரித்து அவருடைய முன்னோர்களை அடக்கம் செய்ததுபோல், யோராமை அவருடைய மக்கள் அடக்கம் செய்யவில்லை.+ 20 ராஜாவானபோது அவருக்கு 32 வயது. அவர் எட்டு வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவர் இறந்துபோனதற்காக யாருமே வருத்தப்படவில்லை. அவரை ‘தாவீதின் நகரத்தில்’+ அடக்கம் செய்தார்கள். ஆனால், ராஜாக்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யவில்லை.+
-