-
1 ராஜாக்கள் 21:19-24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 நீ அவனைப் பார்த்து, ‘ஒருவனைக் கொன்றதும் இல்லாமல்+ அவன் சொத்தையும் எடுத்துக்கொண்டாயா?’+ என்று யெகோவா கேட்கிறார் என்று சொல். ‘நாபோத்தின் இரத்தத்தை நாய்கள் நக்கிய அதே இடத்தில் உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும்’+ என்று யெகோவா சொல்கிறார் என்றும் சொல்” என்றார்.
20 ஆகாப் எலியாவைப் பார்த்து, “எதிரியே,+ என்னைக் கண்டுபிடித்து இங்கேயும் வந்துவிட்டாயா?” என்று கேட்டார். அதற்கு எலியா, “ஆமாம், கண்டுபிடித்துவிட்டேன். கடவுள் சொல்வது என்னவென்றால், ‘யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தே தீருவேன் என்று உறுதியாக இருக்கிறாயே.+ 21 அதனால் உனக்கு முடிவுகட்டுவேன், உன் வம்சத்தை அடியோடு அழிப்பேன்; ஆகாபின் வீட்டிலிருக்கிற எல்லா ஆண்களையும்,* ஆதரவற்றவர்களையும் அற்பமானவர்களையும்கூட, ஒழித்துக்கட்டுவேன்.+ 22 நீ என் கோபத்தைக் கிளறிவிட்டாய், இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிவிட்டாய். அதனால், நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வம்சத்துக்கும்+ அகியாவின் மகன் பாஷாவின் வம்சத்துக்கும்+ ஏற்பட்ட அதே கதிதான் உன் வம்சத்துக்கும் ஏற்படும். 23 யெஸ்ரயேலில் உள்ள நிலத்தில் யேசபேலின் உடலை நாய்கள் தின்னும்+ என்றும் யெகோவா சொல்கிறார். 24 அதோடு, ஆகாபின் வீட்டாரில் எவனாவது நகரத்துக்குள்ளே செத்துப்போனால் அவனை நாய்கள் தின்னும்; அவர்களில் எவனாவது நகரத்துக்கு வெளியே செத்துப்போனால் அவனை வானத்துப் பறவைகள் தின்னும்.+
-