-
எபிரெயர் 10:5-9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 அதனால், கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்தபோது, “‘பலியையும் காணிக்கையையும் நீங்கள் விரும்பவில்லை, ஆனால் எனக்காக ஓர் உடலைத் தயார்படுத்தினீர்கள். 6 தகன பலிகளையும் பாவப் பரிகார பலிகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை’ என்று கடவுளிடம் சொன்னார்.+ 7 அதோடு, ‘கடவுளே, இதோ, உங்களுடைய விருப்பத்தை* நிறைவேற்ற வந்துவிட்டேன். சுருளில்* என்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது’ என்று சொன்னேன்” என்றார்.+ 8 முதலில், திருச்சட்டத்தின்படி கொடுக்கப்படுகிற பலிகளைப் பற்றி, “பலிகளையும் காணிக்கைகளையும் தகன பலிகளையும் பாவப் பரிகார பலிகளையும் நீங்கள் விரும்பவில்லை, அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று சொன்னாலும், 9 பின்பு, “இதோ! உங்களுடைய விருப்பத்தை* நிறைவேற்ற வந்துவிட்டேன்” என்று சொன்னார்.+ அதனால், இரண்டாவதை நிலைநாட்டுவதற்காக முதலாவதை அவர் நீக்கிப்போடுகிறார்.
-