-
மத்தேயு 20:18, 19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 “நாம் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்; மனிதகுமாரன் முதன்மை குருமார்களிடமும் வேத அறிஞர்களிடமும் ஒப்படைக்கப்படுவார், அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து,+ 19 மற்ற தேசத்தாரிடம் அவரை ஒப்படைத்துவிடுவார்கள்; அவர்கள் அவரைக் கேலி செய்து, முள்சாட்டையால் அடித்து, மரக் கம்பத்தில் அறைந்து கொலை செய்வார்கள்.+ ஆனால், மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்”+ என்று சொன்னார்.
-
-
லூக்கா 24:6-8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 அவர் இங்கே இல்லை, அவர் உயிரோடு எழுப்பப்பட்டுவிட்டார். அவர் கலிலேயாவில் இருந்தபோது சொன்ன விஷயங்களை ஞாபகப்படுத்திப் பாருங்கள். 7 மனிதகுமாரன் பாவிகளிடம் ஒப்படைக்கப்படவும், மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்படவும், அதன் பின்பு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்படவும் வேண்டுமென்று அவர் சொன்னாரே” என்றார்கள்.+ 8 அப்போது, அவர் சொல்லியிருந்த வார்த்தைகள் அவர்களுடைய ஞாபகத்துக்கு வந்தன.+
-