உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 16:21
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 21 அன்றுமுதல் இயேசு தன்னுடைய சீஷர்களிடம், தான் எருசலேமுக்குப் போய் பெரியோர்களாலும் முதன்மை குருமார்களாலும் வேத அறிஞர்களாலும் பல பாடுகள் பட்டு, கொலை செய்யப்பட வேண்டும், பின்பு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும்+ என்பதை விளக்கிச் சொல்ல ஆரம்பித்தார்.

  • மாற்கு 10:33, 34
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 33 “இதோ! நாம் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கிறோம், மனிதகுமாரன் முதன்மை குருமார்களிடமும் வேத அறிஞர்களிடமும் ஒப்படைக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து, மற்ற தேசத்தாரிடம் அவரை ஒப்படைத்துவிடுவார்கள். 34 அவர்கள் அவரைக் கேலி செய்து, அவர்மேல் துப்பி, அவரை முள்சாட்டையால் அடித்து, பின்பு கொலை செய்வார்கள்; ஆனால், மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்”+ என்று சொன்னார்.

  • லூக்கா 9:22
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 22 அதோடு, “மனிதகுமாரன் பல பாடுகள் பட வேண்டும், பெரியோர்களாலும்* முதன்மை குருமார்களாலும் வேத அறிஞர்களாலும் ஒதுக்கித்தள்ளப்பட்டு, கொலை செய்யப்பட வேண்டும்,+ பின்பு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும்”+ என்றும் சொன்னார்.

  • லூக்கா 18:32, 33
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 32 உதாரணமாக, மற்ற தேசத்தாரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார்.+ அவர்கள் அவரைக் கேலி செய்து,+ அவமதித்து, அவர்மேல் துப்புவார்கள்.+ 33 அவரை முள்சாட்டையால் அடித்து, பின்பு கொலை செய்வார்கள்.+ ஆனால், மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்