22 அவர்கள் கலிலேயாவில் கூடியிருந்தபோது இயேசு அவர்களிடம், “மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்பட்டு, மக்களுடைய கையில் ஒப்படைக்கப்படுவார்.+ 23 அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள், ஆனால் மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்”+ என்று சொன்னார். அதைக் கேட்டு அவர்கள் மிகவும் துக்கப்பட்டார்கள்.