-
மாற்கு 14:17-21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 சாயங்காலம் ஆனபோது, அவர் அந்தப் பன்னிரண்டு பேரோடு வந்தார்.+ 18 அவர்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என்னோடு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்”+ என்று இயேசு சொன்னார். 19 அப்போது அவர்கள் எல்லாரும் துக்கப்பட்டு, “அது நானா, நானா?” என்று ஒவ்வொருவராகக் கேட்டார்கள். 20 அதற்கு அவர், “பன்னிரண்டு பேரில் ஒருவன்தான் அவன்; என்னோடு சேர்ந்து இந்தப் பாத்திரத்திலிருந்து எடுத்துச் சாப்பிடுகிறவன்தான் அவன்.+ 21 மனிதகுமாரன், தன்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறபடியே உங்களைவிட்டுப் போகிறார்; ஆனால், மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடுதான் வரும்!+ அவன் பிறக்காமல் இருந்திருந்தாலே அவனுக்கு நன்றாக இருந்திருக்கும்”+ என்று சொன்னார்.
-