விதை விதைப்பது
பைபிள் காலங்களில், பல விதங்களில் விதைகள் விதைக்கப்பட்டன. விதைப்பவர்கள் சிலர் ஒரு பையில் விதைகளை நிரப்பி, அதைத் தங்கள் தோளில் மாட்டிக்கொண்டு, இடுப்பிலும் கட்டியிருப்பார்கள்; மற்றவர்கள் தங்களுடைய மேலங்கியின் ஒரு பகுதியில் மடிப்புபோல் செய்து அதில் விதைகளைப் போட்டுக்கொள்வார்கள். பிறகு, விதைகளை அள்ளி வீசுவார்கள். வயல்களில் இருந்த வரப்புகளில் மண் இறுகிப்போயிருந்ததால், விதைப்பவர்கள் நல்ல மண்ணில் மட்டும் விதைகளைக் கவனமாகத் தூவ வேண்டியிருந்தது. விதைகளைப் பறவைகள் தின்றுவிடாதபடி அவற்றை உடனடியாக மண்ணினால் மூட வேண்டியிருந்தது.
சம்பந்தப்பட்ட வசனம்: