கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
தயாராக இருக்கிறீர்களா?
இயற்கைப் பேரழிவை எதிர்ப்பட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? நிலநடுக்கம், புயல், காட்டுத்தீ, வெள்ளம், சுனாமி போன்றவை திடீரென்று ஏற்பட்டு பெரும் நாசத்தை ஏற்படுத்தலாம். அதோடு, தீவிரவாதத் தாக்குதல்கள், கலவரங்கள், கொள்ளைநோய்கள் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். (பிர 9:11) நாம் வாழும் இடத்தில் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லையென்று நாம் தப்புக்கணக்கு போடக்கூடாது.
பேரழிவுக்குத் தயாராவதற்கு நாம் ஒவ்வொருவரும் நியாயமான சில படிகளை எடுக்க வேண்டும். (நீதி 22:3) பேரழிவின்போது நமக்கு உதவி செய்வதற்காக யெகோவாவின் அமைப்பு சில விஷயங்களைச் செய்வார்கள் என்பது உண்மைதான். ஆனாலும், இயற்கைப் பேரழிவைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது.—கலா 6:5, அடிக்குறிப்பு.
இயற்கை பேரழிவை சமாளிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
யெகோவாவோடு நல்ல பந்தத்தில் இருப்பது பேரழிவு ஏற்படும்போது நமக்கு எப்படி உதவி செய்யும்?
இவற்றையெல்லாம் செய்வது ஏன் முக்கியம்?
• பேரழிவுக்கு முன்பும், பேரழிவின்போதும், பேரழிவுக்குப் பின்பும் மூப்பர்களோடு தொடர்பில் இருப்பது
• அவசரத்துக்குத் தேவையான பொருள்களைத் தயாராக வைப்பது.—g17.5 பக். 6
• என்னென்ன பேரழிவுகள் ஏற்படலாம், அந்த ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் கலந்துபேசுவது
பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய என்ன மூன்று வழிகள் இருக்கின்றன?