-
மத்தேயு 7:25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து, அந்த வீட்டின் மேல் மோதியபோதும், அது இடிந்து விழவில்லை. ஏனென்றால், அது பாறைமேல் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது.
-
-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து: இஸ்ரவேலில் குளிர்காலத்தின்போது (முக்கியமாக, தேபேத் மாதத்தில், அதாவது டிசம்பர்/ஜனவரி சமயத்தில்) திடீரென்று புயல் அடிப்பது சகஜமாக இருந்தது. அப்போது, காற்று பலமாக வீசியது, கனமழை பெய்தது, வெள்ளம் பெருக்கெடுத்து வந்து பேரழிவை ஏற்படுத்தியது.—இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
-