மே 12-18
நீதிமொழிகள் 13
பாட்டு 34; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. ‘பொல்லாதவனின் விளக்கை’ பார்த்து ஏமாந்துவிடாதீர்கள்
(10 நிமி.)
பொல்லாதவர்களுக்கு எதிர்காலமே இல்லை (நீதி 13:9; it-2 பக். 196 பாரா. 2-3)
கெட்டதை நல்லதாகக் காட்டும் ஆட்களோடு பழகாதீர்கள் (நீதி 13:20; w12 7/15 பக். 12 பாரா 3)
நீதிமான்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார் (நீதி 13:25; w04 7/15 பக். 31 பாரா 6)
உலக ஆசைகளைத் தேடிப் போகிறவர்கள் ஓகோவென்று வாழ்வதுபோல் தெரியலாம். ஆனால், அது உண்மையில்லை. யெகோவாவின் விருப்பத்தைச் செய்கிறவர்கள்தான் ரொம்பச் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ்கிறார்கள்
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
நீதி 13:24—தவறாகக் காண்பிக்கப்படும் அன்பைப் பற்றி பைபிள் என்ன எச்சரிப்பைக் கொடுக்கிறது? (it-2 பக். 276 பாரா 2)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) நீதி 13:1-17 (th படிப்பு 10)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிப் பேச ஆரம்பியுங்கள். பிறகு, அந்த நபருக்கு இன்னும் அதிக பொருத்தமாக இருக்கிற ஒரு வசனத்தை பைபிளிலிருந்து காட்டுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 5)
5. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. கூட்டத்துக்கு ஒருவரை அழையுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 3)
6. பேச்சு
(5 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 9—பொருள்: பெற்றோரை மதித்து அவர்களுக்குக் கீழ்ப்படியும் பிள்ளைகளுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும். (th படிப்பு 16)
பாட்டு 77
7. “நீதிமானின் விளக்கு பிரகாசமாக ஒளிவீசும்”
(8 நிமி.) கலந்துபேசுங்கள்.
கடவுளுடைய வார்த்தையில் அளவில்லாத அறிவும் ஞானமும் புதைந்திருக்கின்றன. அதன் வெளிச்சத்தில் நாம் நடந்தால், அதாவது அதன் ஆலோசனைகளின்படி நாம் வாழ்ந்தால், வெற்றியும் சந்தோஷமும் நம்மைத் தேடி வரும். இதையெல்லாம் உலகத்தால் தரவே முடியாது.
தன்னிடம் இல்லாத ஒன்றை இந்த உலகத்தால் கொடுக்க முடியாது என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
“நீதிமானின் விளக்கு” ‘பொல்லாதவனின் விளக்கைவிட’ ரொம்ப மேலானது என்பதை சகோதரி கயினான்சினாவின் அனுபவம் எப்படிக் காட்டுகிறது?—நீதி 13:9
இந்த உலகக் காரியங்களைப் பற்றி பகல் கனவு கண்டுகொண்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காக நீங்கள் எடுத்த முடிவுகளை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டும் இருக்காதீர்கள். (1யோ 2:15-17) அதற்குப் பதிலாக, உங்களுக்குக் கிடைத்திருக்கிற “அறிவுதான் ஈடில்லாத செல்வம்” என்று புரிந்துகொண்டு அதற்கே எப்போதும் முக்கியத்துவம் கொடுங்கள்.—பிலி 3:8.
8. சபைத் தேவைகள்
(7 நிமி.)
9. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 26 பாரா. 9-17