-
“யெகோவாவே ஞானத்தை தருகிறார்”காவற்கோபுரம்—1999 | நவம்பர் 15
-
-
பூர்வ இஸ்ரவேலில் ஞானத்தில் தலைசிறந்து விளங்கிய சாலொமோன் ராஜா, தகப்பனுக்குரிய பாசத்துடன் அன்பான வார்த்தைகளில் சொல்கிறதாவது: “என் மகனே நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்திற்கு செவிசாய்த்து, விவேகத்தின்பால் மனம் சாய்வாயாகில்; மேலும், நீ புரிந்துகொள்ளுதலை வா என கூப்பிட்டு விவேகத்தை சப்தமிட்டு அழைப்பாயாகில்; நீ வெள்ளியைப்போல் அதை நாடுவாயாகில்; புதையல்களைத் தேடுகிறதுபோல் அதை தேடுவாயாகில், அப்பொழுது யெகோவாவிற்குப் பயப்படுதல் இன்னதென்று அறிந்துகொள்வாய், கடவுளை அறியும் அறிவையும் கண்டடைவாய்.”—நீதிமொழிகள் 2:1-5, NW.
-
-
“யெகோவாவே ஞானத்தை தருகிறார்”காவற்கோபுரம்—1999 | நவம்பர் 15
-
-
நேர்மை மனதோடு பைபிளை ஆழத் தோண்டுகையில் எப்பேர்ப்பட்ட பெரும் புதையல் நமக்குக் காத்திருக்கிறது என்பதை கவனியுங்கள். நிச்சயமாகவே, ‘கடவுளை அறியும் அறிவை’ அதாவது நம் கடவுளைப் பற்றிய தெளிவான, நிலையான, ஜீவனளிக்கும் அறிவை கண்டடைவோமே! (யோவான் 17:3) ‘யெகோவாவிற்குப் பயப்படுதலும்’ பெறவேண்டிய ஒரு புதையலே. இத்தகைய பயபக்தியை அவரிடம் காட்டுவது எத்தனை மதிப்புமிக்கது! அவருக்குப் பிரியமில்லாததைச் செய்துவிடுவோமோ என்ற நியாயமான பயம் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆட்கொண்டு, நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஆவிக்குரிய முக்கியத்துவத்தைச் சேர்க்கும்.—பிரசங்கி 12:13.
-