-
“இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்”என்னைப் பின்பற்றி வா
-
-
19, 20. பிரசங்க வேலையின் அவசரத் தன்மையை தாம் உணர்ந்திருந்ததை இயேசு எப்படி ஓர் உவமையுடன் விளக்கினார்?
19 மூன்றாவதாக, ஊழியத்தை இயேசு அவசர உணர்வோடு செய்தார். சீகார் நகரத்திற்கு வெளியே இருந்த கிணற்றருகில் சமாரியப் பெண்ணோடு அவர் பேசியதை நினைத்துப் பாருங்கள். அவசரத் தன்மையோடு நல்ல செய்தியை அறிவிப்பதன் அவசியத்தை இயேசுவின் அப்போஸ்தலர்கள் அந்தச் சமயத்தில் உணரவில்லை. அவர்களிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “அறுவடைக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறதென்று நீங்கள் சொல்வதில்லையா? இதோ! நான் உங்களுக்குச் சொல்கிறேன்: வயல்களை ஏறெடுத்துப் பாருங்கள். அவை விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன.”—யோவான் 4:35.
20 அந்தச் சமயத்தில் நிலவிய பருவகாலத்தையே உவமையாக இயேசு பயன்படுத்தினார். அது கிஸ்லே (நவம்பர்/டிசம்பர்) மாதமாக இருந்திருக்க வேண்டும். பார்லி அறுவடைக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருந்தன, அதாவது நிசான் 14, பஸ்கா பண்டிகை சமயத்தில்தான் அறுவடை நடக்கும். இன்னும் நிறைய நாள் இருந்ததால் அவசரமாக அறுவடை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அந்தச் சமயத்தில் நினைக்கவில்லை. ஆனால், அடையாள அர்த்தத்தில் அறுவடை செய்வதைப் பற்றி என்ன? ஆம், நல்ல செய்தியைக் கேட்பதற்கு, கற்றுக்கொள்வதற்கு, கிறிஸ்துவின் சீஷர்களாய் ஆவதற்கு, யெகோவா அளிக்கும் மகத்தான நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கு எத்தனையோ பேர் தயாராய் இருந்தார்கள். அடையாள அர்த்தமுள்ள இந்த வயல்வெளியை இயேசு ஏறெடுத்து பார்த்தபோது காற்றில் மென்மையாக அசைந்தாடும் கதிர்கள் அறுவடைக்குத் தயாராய் இருப்பது போல் அவருக்குத் தெரிந்தது. அறுவடைக்கான நேரம் நெருங்கிவிட்டதால் அதை மிக அவசரமாகச் செய்ய வேண்டியிருந்தது! அதனால்தான், ஓர் ஊரில் இருந்த மக்கள் இயேசுவைத் தங்களோடே தங்கிவிடும்படி சொன்னபோது, “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார்.—லூக்கா 4:43.
-