-
தீருவின் அகந்தையை யெகோவா அழிக்கிறார்ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
-
-
32 நம் பொருளாதார சூழ்நிலை எதுவாயிருந்தாலும்சரி, கடவுளுடைய ராஜ்யத்தை நம் வாழ்க்கையில் முதல் இடத்தில் வைக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய யோவானின் வார்த்தைகளை நாம் எப்போதும் கவனத்தில் வைக்க வேண்டும்: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.” (1 யோவான் 2:15) இந்த உலகின் பொருளாதார அமைப்பு, நம் வாழ்க்கைக்கு தேவையே. (2 தெசலோனிக்கேயர் 3:10) எனவே, இந்த ‘உலக செல்வத்தை பயன்படுத்துகிறோம்.’ இருந்தாலும், அதில் “முழுமையாக” ஈடுபடுவதில்லை. (1 கொரிந்தியர் 7:31, பொ.மொ.) உலகத்தின்மீது, அதாவது பொருள்மீது மிதமிஞ்சிய ஆசை வைத்தால், நமக்கு யெகோவாவில் அன்பில்லை என்பதையே காட்டுகிறது. ‘மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை’ ஆகிய இவற்றையே நாடுவது, கடவுளுடைய சித்தத்தை செய்வோருக்கு பொருத்தமற்ற காரியம்.d கடவுளுடைய சித்தத்தை செய்வதே நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும்.—1 யோவான் 2:16, 17.
-
-
தீருவின் அகந்தையை யெகோவா அழிக்கிறார்ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
-
-
d அலஸோனையா என்ற கிரேக்க பதத்தின் மொழிபெயர்ப்பே ‘ஜீவனத்தின் பெருமை’ என்பது. “உலக காரியங்கள் நிலையானவை என நம்பும் கடவுள் பக்தியற்ற, வீணான எண்ணம்” என இது விளக்கப்படுகிறது.—த நியூ தேயர்ஸ் கிரீக்-இங்லீஷ் லெக்ஸிகன்.
-