உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மகா நகரம் அழிந்துபோயிற்று
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
    • 23. வானத்திலிருந்து உண்டான சத்தம் மகா பாபிலோனை விட்டு ஓடிவருவதன் அவசரத்தன்மையை எப்படி வலியுறுத்திக் காட்டுகிறது?

      23 உலக மதங்களோடு உறுப்பினர்களாக இல்லாமல், முற்றிலும் பிரித்துக்கொண்டு மகா பாபிலோனை விட்டு ஓடிவருவது உண்மையிலேயே அவ்வளவு அவசரமாயிருக்கிறதா? அவசரமாகத்தான் இருக்கிறது, ஏனென்றால் இந்தப் பண்டைய, பயங்கரமான மகா பாபிலோனைப் பற்றிய கடவுளுடைய நோக்குநிலையை நாம் ஏற்பது அவசியமானது. அவர் அவளை மகா வேசி என்று அழைப்பதன் மூலம் அவருடைய வார்த்தைகள் அவளைக் குறைத்துக்கூறுவதாய் இல்லை. ஆகவே இப்போது வானத்திலிருந்து வரும் சத்தம் இந்த வேசியைக் குறித்து மேலும் சொல்கிறது: “அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார். அவள் உங்களுக்குப் பலனளித்தது போல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள். அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள். ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.”—வெளிப்படுத்துதல் 18:5-8.

  • மகா நகரம் அழிந்துபோயிற்று
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
    • 27. பூர்வ பாபிலோனுக்கும் மகா பாபிலோனுக்கும் இடையே என்ன இணைப்பொருத்தங்கள் இருக்கின்றன?

      27 பூர்வ பாபிலோனுடைய வீழ்ச்சியும் முடிவான அழிவும் அவள் செய்த பாவங்களினிமித்தம் கிடைத்த தண்டனையாகும். “அதின் ஆக்கினை வானமட்டும் ஏறி”னது. (எரேமியா 51:9) அதேபோல, மகா பாபிலோனின் பாவங்கள் “வானபரியந்தம் எட்டி,” யெகோவாவுடைய கவனத்துக்குத்தாமே கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அநீதி, விக்கிரகாராதனை, ஒழுக்கக்கேடு, கொடுமை, களவு, கொலை செய்தமைக்கு அவள் குற்றமுள்ளவளாயிருக்கிறாள். சிறியளவில், யெகோவாவுடைய ஆலயத்துக்கும் அவருடைய உண்மை வணக்கத்தாருக்கும் செய்த காரியங்களுக்குப் பழிவாங்குவதாய் பூர்வ பாபிலோனின் வீழ்ச்சியிருந்தது. (எரேமியா 50:8, 14; 51:11, 35, 36) அதேபோல, கடந்த நூற்றாண்டுகளினூடே உண்மை வணக்கத்தாருக்குச் செய்த காரியங்களுக்குப் பழிவாங்குவதன் வெளிக்காட்டுகளாக, மகா பாபிலோனின் வீழ்ச்சியும் முடிவில் அவளுக்கு ஏற்படவிருக்கும் அழிவும் இருக்கிறது. உண்மையில், அவளுக்கு ஏற்படும் முடிவான அழிவு ‘நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளின்’ துவக்கமாயிருக்கிறது.—ஏசாயா 34:8-10; 61:2; எரேமியா 50:28.

      28. மகா பாபிலோனிடம் யெகோவா என்ன நீதியான தராதரத்தைப் பிரயோகிக்கிறார், ஏன்?

      28 மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ், இஸ்ரவேலன் ஒருவன் தன்னுடைய உடன் தேசத்தானிடமிருந்து திருடுவானேயானால், பதிலாக குறைந்தபட்சம் இரட்டிப்பாய் அவன் கொடுக்கவேண்டும். (யாத்திராகமம் 22:1, 4, 7, 9) வரப்போகிற மகா பாபிலோனின் அழிவில், யெகோவா இதேபோன்ற ஒரு நீதியான தராதரத்தைப் பிரயோகிப்பார். அவள் எவ்வளவாய் கொடுத்தாளோ, அவ்வளவாய் அவள் இரட்டிப்பாய் பெறவேண்டும். எந்தவித இரக்கமும் காட்டப்படாது, ஏனெனில் மகா பாபிலோன் தனக்குப் பலியான ஆட்களுக்கு எந்தவித இரக்கத்தையும் காட்டவில்லை. ‘செல்வச்செருக்காய்’ தன்னைத்தானே வைத்துகொள்வதற்குப் பூமியிலுள்ள மக்களிடமிருந்து சுரண்டி வாழ்ந்தாள். இப்போது அவள் கஷ்டத்தையும் துக்கத்தையும் அனுபவிப்பாள். பூர்வ பாபிலோன், தான் முற்றிலும் ஒரு பாதுகாப்பான நிலைமையிலுள்ளதாக உணர்ந்து, “நான் விதவையாவதில்லை, நான் சந்தான தேசத்தை அறிவதில்லை,” என்று பெருமைப்பட்டுக்கொண்டாள். (ஏசாயா 47:8, 9, 11) மகா பாபிலோனும் பாதுகாப்பாகத்தான் உணர்ந்துவருகிறது. ஆனால் “வல்லமையுள்ளவ”ராகிய யெகோவா விதித்திருக்கும் அவளுடைய அழிவோ, “ஒரே நாளில்” நடப்பதுபோல வெகு விரைவில் நடைபெறும்!

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்