-
“உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு”வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
10. பிலதெல்பியாவிலுள்ள சபைக்கு என்ன உற்சாகத்தை இயேசு கொடுக்கிறார்?
10 இப்படிப்பட்ட அதிகாரப்பூர்வமான ஊற்றுமூலத்திலிருந்து பிலதெல்பியாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு வரும் இயேசுவின் வார்த்தைகள் விசேஷமாக ஆறுதலளிப்பதாக இருக்க வேண்டும்! அவர் இவ்வாறு சொல்வதன் மூலம் அவர்களைப் போற்றுகிறார்: “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.” (வெளிப்படுத்துதல் 3:8) அந்தச் சபை சுறுசுறுப்புள்ளதாயிருந்தது, ஒரு வாசல் அதற்கு முன்பு திறக்கப்பட்டிருக்கிறது—சந்தேகமில்லாமல் ராஜ்ய ஊழியத்திற்கான வாய்ப்பின் வாசல். (ஒப்பிடவும்: 1 கொரிந்தியர் 16:9; 2 கொரிந்தியர் 2:12.) ஆகவே, பிரசங்கிப்பதற்கான வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இயேசு சபையை உற்சாகப்படுத்துகிறார். தேவனுடைய ஆவியின் உதவியோடு அவர்கள் சகித்துக்கொண்டு யெகோவாவின் சேவையில் மேலுமான “கிரியைகளை” செய்ய தங்களிடம் போதுமான பெலன் இருப்பதைக் காண்பித்திருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 12:10; சகரியா 4:6) அவர்கள் இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார்கள், மேலும் வார்த்தையினாலோ அல்லது கிரியையினாலோ கிறிஸ்துவை மறுதலிக்காதிருந்திருக்கிறார்கள்.
-
-
“உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு”வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
14. ஏசாயா 49:23-ம் சகரியா 8:23-ம் எவ்வாறு தற்காலத்தில் குறிப்பிடத்தக்க நிறைவேற்றமடைந்திருக்கின்றன?
14 தற்காலத்தில், ஏசாயா 49:23 மற்றும் சகரியா 8:23 போன்ற தீர்க்கதரிசனங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க நிறைவேற்றத்தை அடைந்திருக்கின்றன. யோவான் வகுப்பாரின் பிரசங்கிப்பின் விளைவாக, மக்கள் திரளான எண்ணிக்கையில் திறந்த வாசல் வழியாக ராஜ்ய சேவையில் நுழைந்திருக்கிறார்கள்.b இவர்களில் அநேகர் கிறிஸ்தவ மண்டலத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள், இவர்களின் மதங்கள் தாங்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலர் என்று பொய்யாக உரிமைபாராட்டுகின்றன. (ரோமர் 9:6-ஐ ஒப்பிடவும்.) இவர்கள், ஒரு திரள்கூட்டமாக, இயேசுவுடைய பலியின் இரத்தத்தின்மேல் விசுவாசம் வைப்பதன் மூலம் தங்கள் அங்கிகளைத் துவைத்து அவற்றை வெண்மையாக ஆக்குகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 10, 14) கிறிஸ்துவின் ராஜ்ய ஆட்சிக்குக் கீழ்ப்படிவதனால், அதன் ஆசீர்வாதங்களை இங்கே பூமியிலே சுதந்தரிக்க நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். ஆவிக்குரிய விதத்தில் சொல்வோமானால், அவர்கள் இயேசுவின் அபிஷேகஞ்செய்யப்பட்ட சகோதரர்களிடம் வந்து “பணிவார்கள்,” ஏனென்றால், ‘தேவன் அவர்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறார்கள்.’ இந்த அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களுக்கு அவர்கள் ஊழியம் செய்கிறார்கள், இவர்களோடு உலகளாவிய சகோதர கூட்டுறவில் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.—மத்தேயு 25:34-40; 1 பேதுரு 5:9.
-
-
“உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு”வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
b யோவான் வகுப்பினரால் பிரசுரிக்கப்படும் காவற்கோபுர பத்திரிகை, பிரசங்க வேலையில் எவ்வளவு கூடுமோ அவ்வளவு பங்குகொள்ள, இந்தச் சந்தர்ப்பத்தை ஆதாயப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசரத்தை தொடர்ந்து உயர்த்திக் காண்பிக்கிறது; உதாரணமாக, ஜனவரி 1, 2004 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில், “யெகோவாவின் மகிமையை அனைவரும் அறிவிப்பார்களாக!,” “‘அவர்களின் சத்தம் பூமியெங்கும் செல்கிறது’” என்ற கட்டுரைகளைப் பாருங்கள். ஜூன் 1, 2004 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில், “தேவனை மகிமைப்படுத்துகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்ற கட்டுரையில், முழுநேர ஊழியத்தில் ‘திறந்த வாசலுக்குள்’ நுழைவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இப்படி ஊழியம் செய்ததால் 2005-ம் ஆண்டில் ஒரு மாதத்தில் பயனியர்களின் உச்ச எண்ணிக்கை 10,93,552 என அறிக்கை செய்யப்பட்டிருந்தது.
-