-
“உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு”வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
“அவர்கள் உனக்குப் பணிவார்கள்”
11. என்ன ஆசீர்வாதத்தை இயேசு கிறிஸ்தவர்களுக்கு வாக்களிக்கிறார், இது எப்படி நிறைவேறியது?
11 ஆகவே, இயேசு அவர்கள் பலன்களை வாக்களிக்கிறார்: “இதோ, யூதனல்லாதிருந்தும் தங்களை யூதனென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன் மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.” (வெளிப்படுத்துதல் 3:9) ஒருவேளை சிமிர்னாவிலிருந்ததுபோல் உள்ளூர் யூதர்களிடமிருந்து சபை, பிரச்சினைகளைக் கொண்டிருந்திருக்கலாம். இவர்களைச் ‘சாத்தானின் கூட்டத்தார்’ என்று இயேசு அழைக்கிறார். இருந்தபோதிலும், அந்த யூதர்களில் ஒருசிலராவது இயேசுவைப் பற்றி கிறிஸ்தவர்கள் எதைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்களோ அதுவே சத்தியமென்று உணரும் நிலையிலிருந்தனர். அவர்கள் ‘பணிந்து கொள்ளுதல்’ பவுல் 1 கொரிந்தியர் 14:24, 25-ல் விளக்கும் விதத்தைப் போன்றிருக்கலாம், இப்படியாக அவர்கள் உண்மையில் மனந்திரும்பி கிறிஸ்தவர்களாகி, தம்முடைய சீஷர்களுக்காக தம் ஆத்துமாவையுங்கூட கொடுத்த இயேசுவின் பெரிதான அன்பை முழுமையாக மதித்துணருகிறார்கள்.—யோவான் 15:12, 13.
12. பிலதெல்பியாவின் யூத ஜெப ஆலய அங்கத்தினர்கள், அவர்களில் சிலர் உள்ளூர் கிறிஸ்தவ சமூகத்துக்கு ‘பணிய வேண்டும்’ என்பதை அறிய ஏன் அதிர்ச்சியடைந்திருப்பார்கள்?
12 பிலதெல்பியாவிலுள்ள யூத ஜெப ஆலய அங்கத்தினர்கள், அவர்களில் சிலர் உள்ளூர் கிறிஸ்தவ சமூகத்துக்கு ‘பணிய வேண்டும்’ என்பதை அறிய அதிர்ச்சியடைந்திருப்பார்கள். உண்மையில் பார்க்கப்போனால் அந்தச் சபையில் யூதரல்லாத அநேகர் இருக்கிறார்கள், அவர்கள் நேர் எதிரானது நடைபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஏன்? ஏனென்றால் ஏசாயா முன்னறிவித்தார்: “[யூதரல்லாத] ராஜாக்கள் உன்னை [இஸ்ரவேலின் மக்களை] வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையில் முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து” கொள்வார்கள். (ஏசாயா 49:23; 45:14; 60:14) இதே பாணியில் சகரியா இவ்வாறு எழுத தூண்டப்பட்டார்: “அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் [யூதரல்லாரவர்] ஒரு யூதனுடைய வஸ்திரத் தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் வாருங்கள் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள்.” (சகரியா 8:23) ஆம், யூதரல்லாதவர்கள் யூதருக்கு முன்பாக பணிய வேண்டும், எதிர்மாறாக அல்ல!
13. பூர்வ இஸ்ரவேலுக்கு சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை அனுபவிக்கப்போகிற அந்த யூதர்கள் யார்?
13 அந்தத் தீர்க்கதரிசனங்கள் தேவனின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்திற்கு எழுதப்பட்டது. இவைகள் உரைக்கப்பட்டபோது அந்த மதிப்புவாய்ந்த நிலையை மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர் எடுத்துக்கொண்டனர். ஆனால் யூத ஜாதி மேசியாவை தள்ளியபோது, யெகோவா அவர்களைப் புறம்பே தள்ளிவிட்டார். (மத்தேயு 15:3-9; 21:42, 43; லூக்கா 12:32; யோவான் 1:10, 11) பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளின்போது, அந்த நிலைக்கு, தேவனுக்கு உண்மையுள்ள இஸ்ரவேலை, கிறிஸ்தவ சபையை தெரிந்தெடுத்தார். அதன் அங்கத்தினர்கள் இருதயத்தில் உண்மையில் விருத்தசேதனஞ் செய்த ஆவிக்குரிய யூதர்கள். (அப்போஸ்தலர் 2:1-4, 41, 42; ரோமர் 2:28, 29; கலாத்தியர் 6:16) அதன் பிறகு, சொல்லர்த்தமான யூதர்கள் யெகோவாவுடன் தயவுபெற்ற உறவிற்குள் வருவதற்கு ஒரே வழியானது அவர்கள் மேசியாவாக இயேசுவில் விசுவாசம் வைப்பதே. (மத்தேயு 23:37-39) தெளிவாக, பிலதெல்பியாவிலுள்ள சில நபர்களிடம் இது இவ்வாறு நடக்கவிருந்தது.a
14. ஏசாயா 49:23-ம் சகரியா 8:23-ம் எவ்வாறு தற்காலத்தில் குறிப்பிடத்தக்க நிறைவேற்றமடைந்திருக்கின்றன?
14 தற்காலத்தில், ஏசாயா 49:23 மற்றும் சகரியா 8:23 போன்ற தீர்க்கதரிசனங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க நிறைவேற்றத்தை அடைந்திருக்கின்றன. யோவான் வகுப்பாரின் பிரசங்கிப்பின் விளைவாக, மக்கள் திரளான எண்ணிக்கையில் திறந்த வாசல் வழியாக ராஜ்ய சேவையில் நுழைந்திருக்கிறார்கள்.b இவர்களில் அநேகர் கிறிஸ்தவ மண்டலத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள், இவர்களின் மதங்கள் தாங்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலர் என்று பொய்யாக உரிமைபாராட்டுகின்றன. (ரோமர் 9:6-ஐ ஒப்பிடவும்.) இவர்கள், ஒரு திரள்கூட்டமாக, இயேசுவுடைய பலியின் இரத்தத்தின்மேல் விசுவாசம் வைப்பதன் மூலம் தங்கள் அங்கிகளைத் துவைத்து அவற்றை வெண்மையாக ஆக்குகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 10, 14) கிறிஸ்துவின் ராஜ்ய ஆட்சிக்குக் கீழ்ப்படிவதனால், அதன் ஆசீர்வாதங்களை இங்கே பூமியிலே சுதந்தரிக்க நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். ஆவிக்குரிய விதத்தில் சொல்வோமானால், அவர்கள் இயேசுவின் அபிஷேகஞ்செய்யப்பட்ட சகோதரர்களிடம் வந்து “பணிவார்கள்,” ஏனென்றால், ‘தேவன் அவர்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறார்கள்.’ இந்த அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களுக்கு அவர்கள் ஊழியம் செய்கிறார்கள், இவர்களோடு உலகளாவிய சகோதர கூட்டுறவில் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.—மத்தேயு 25:34-40; 1 பேதுரு 5:9.
-
-
“உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு”வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
17 யோவான் வகுப்பான அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் 1918-ல்—பிலதெல்பியாவிலுள்ள அந்த உறுதியான சபையைப் போல—எதிர்ப்பை தற்கால “சாத்தானின் கூட்டத்தா”ரிடமிருந்து எதிர்ப்படவேண்டியிருந்தது. ஆவிக்குரிய யூதர்கள் என்று தங்களை உரிமைபாராட்டின கிறிஸ்தவமண்டலத்தின் மதத் தலைவர்கள், மெய்க் கிறிஸ்தவர்களை ஒடுக்குவதற்காக ஆட்சியாளர்களைத் தந்திரமாக செயல்படுத்தினார்கள். இருந்தபோதிலும், இவர்கள் ‘இயேசுவின் வார்த்தையாகிய சகிப்புத்தன்மையைக் காத்துக்கொள்ள’ கடுமையாக முயற்சி செய்தார்கள்; ஆகவே, ஒரு வெளிப்படையான “கொஞ்ச பெல”னான ஆவிக்குரிய உதவியுடன், அவர்கள் தப்பிப்பிழைத்தார்கள், மேலும் அவர்களுக்கு முன்பு இப்போது திறந்திருந்த வாசலுக்குள் நுழைய தூண்டுவிக்கப்பட்டனர். எந்த விதத்தில்?
-
-
“உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு”வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
19. யோவான் வகுப்பார் 1919-ல் இயேசு கொடுத்த பொறுப்பை எவ்வாறு கையாண்டார்கள், என்ன விளைவோடு?
19 அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர், 1919 முதல் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை உலகமுழுவதும் பிரசங்கிக்கும் அதிதீவிரமான வேலையில் இறங்கினார்கள். (மத்தேயு 4:17; ரோமர் 10:18) இதன் விளைவாக, சாத்தானின் தற்கால ஜெபாலயமாகிய கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த சிலர், இந்த அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதியானோரிடம் வந்து, அடிமையின் அதிகாரத்துவத்தை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பி, ‘பணிகிறார்கள்.’ அவர்களுங்கூட யோவான் வகுப்பைச் சார்ந்த மூத்தவர்களுடன் ஐக்கியப்பட்டு யெகோவாவைச் சேவிக்க வந்தார்கள். இது இயேசுவின் அபிஷேகஞ்செய்யப்பட்ட சகோதரர்களின் முழு எண்ணிக்கையும் சேர்க்கப்படும் வரையாக தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, ‘சகல ஜாதிகளிலிருந்தும் ஒரு திரள் கூட்டம்’ அபிஷேகஞ்செய்யப்பட்ட அடிமைக்கு முன்பாக “பணிய” வந்தது. (வெளிப்படுத்துதல் 7:3, 4, 9) ஒன்றாக சேர்ந்து, அடிமையும் இந்தத் திரள்கூட்டமும் யெகோவாவின் சாட்சிகளாக ஒரே மந்தையாக சேவை செய்கிறார்கள்.
-