-
வெளிநெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை வாங்கிக்கொள்வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
2 அலசிகிர்க்கு 88 கிலோமீட்டர் தென் கிழக்கே, டெனிஸ்லிக்கு அருகில் லலோதிக்கேயாவின் இடிபாடுகளை இன்று நீங்கள் காண்பீர்கள். முதல் நூற்றாண்டில், லவோதிக்கேயா ஒரு செல்வச்செழிப்பான நகரமாக இருந்தது. ஒரு பெரிய சாலை சந்திப்பில் இருந்தது, தொழில் நிதிக்கும் வர்த்தகத்திற்கும் இது ஒரு முக்கிய மையமாக இருந்தது. நன்றாக அறியப்பட்ட கண் மருந்தின் விற்பனை இதனுடைய செல்வத்தைக் கூட்டியது, மேலும் நல்ல கறுப்பு கம்பளியிலிருந்து, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட அதனுடைய உயர்ந்த தரமுள்ள ஆடைகளுக்கும் இது புகழ்பெற்றதாக இருந்தது. நகரத்தின் பெரிய பிரச்சினையாக இருந்த தண்ணீர் பற்றாக்குறை, சிறிது தூரத்திற்கு அப்பால் இருந்த வெப்பமான நீரூற்றிலிருந்து தண்ணீரை கால்வாய்ப்படுத்துவதன் மூலமாக தீர்க்கப்பட்டிருந்தது. அதனால், நகரத்தை தண்ணீர் சென்றடையும்போது வெதுவெதுப்பாகத்தான் இருக்கும்.
-
-
வெளிநெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை வாங்கிக்கொள்வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
6. (அ) லவோதிக்கேயாவிலுள்ள சபையின் ஆவிக்குரிய நிலைமையை இயேசு எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) இயேசுவின் என்ன நல்ல முன்மாதிரியை லவோதிக்கேயாவிலுள்ள கிறிஸ்தவர்கள் பின்பற்ற தவறியிருக்கின்றனர்?
6 லவோதிக்கேயர்களுக்கு இயேசு என்ன செய்தியைக் கொண்டிருக்கிறார்? போற்றுதலுக்கான வார்த்தையை அவர் கொண்டில்லை. வெளிப்படையாகவே அவர்களுக்கு இவ்வாறு அவர் சொல்கிறார்: “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப் போடுவேன்.” (வெளிப்படுத்துதல் 3:15, 16) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து வரக்கூடிய அப்படிப்பட்ட ஒரு செய்திக்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிப்பீர்கள்? விழித்தெழுந்து உங்களை நீங்களே சோதித்துப் பார்க்க மாட்டீர்களா? உண்மையாகவே, அந்த லவோதிக்கேயர்கள் ஆவிக்குரிய பிரகாரமாக சோம்பலாயிருந்து, வெளிப்படையாகவே அதிக சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டால், தங்களையே ஊக்குவிக்கவேண்டிய தேவை இருக்கிறது. (2 கொரிந்தியர் 6:1-ஐ ஒப்பிடுக.) கிறிஸ்தவர்களாக, யெகோவாவுக்கும் அவருடைய சேவைக்கும் எல்லா சமயங்களிலும் கொழுந்துவிட்டு எரியக்கூடிய வைராக்கியத்தைக் காண்பித்த இயேசுவை, அவர்கள் பின்பற்றியிருக்க வேண்டும். (யோவான் 2:17) மேலுமாக, புழுக்கமிக்க ஒரு வெப்பமான நாளில் ஒரு குவளை குளிர்ந்த தண்ணீரானது புத்துயிரளிப்பது போல, அவர் எல்லா சமயங்களிலும் தயவும் கனிவுமுடையவராக இருப்பதை சாந்தமுள்ளவர்கள் கண்டிருக்கின்றனர். (மத்தேயு 11:28, 29) ஆனால் லவோதிக்கேயாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு அனலுமில்லை, குளிருமில்லை. அவர்களுடைய நகரத்திற்குள் பாய்ந்து வந்த தண்ணீரைப் போன்று, அவர்கள் சற்றே சூடாக, வெதுவெதுப்பாக ஆகியிருந்தனர். இயேசுவினால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்டு, ‘அவருடைய வாயிலிருந்து வாந்தி பண்ணிப்போடப்படுவதற்கு’ தகுதியானவர்களாக அவர்கள் இருந்தார்கள்! இயேசு செய்ததைப் போன்று, மற்றவர்களுக்கு ஆவிக்குரிய புத்துயிரளிப்பதற்கு, நாம் எப்போதும் நம்முடைய பாகத்தில் வைராக்கியத்துடன் முயற்சி செய்வோமாக.—மத்தேயு 9:35-38.
-