-
இரண்டு சாட்சிகளை உயிருக்கு மீண்டெழச்செய்வதுவெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
15. (அ) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இரண்டு சாட்சிகளாக விவரிக்கப்பட்டுள்ளது எதையும் நமக்கு நினைப்பூட்டுகிறது? விளக்குக. (ஆ) அந்த இரண்டு சாட்சிகள் என்ன வகையான அடையாளங்களை நடப்பிக்க அதிகாரம் கொடுக்கப்படுகின்றனர்?
15 இவர்கள் இரண்டு சாட்சிகளாக விவரிக்கப்படும் உண்மை மறுரூபக் காட்சியையும் நமக்கு நினைப்பூட்டுகிறது. அந்தத் தரிசனத்திலே, இயேசுவை மோசேயுடனும் எலியாவுடனும் ராஜ்ய மகிமையில் அவருடைய மூன்று அப்போஸ்தலரும் கண்டனர். இது அந்த இரண்டு தீர்க்கதரிசிகளைக்கொண்டு முன்குறிக்கப்பட்ட ஒரு வேலையை செய்துமுடிக்க இயேசு 1914-ல் தம்முடைய மகிமையான சிங்காசனத்தில் அமருவதை முன்நிழலாகக் குறிப்பிட்டது. (மத்தேயு 17:1-3 ) பொருத்தமாகவே, மோசேயும் எலியாவும் செய்ததைப்போன்றே இந்த இரண்டு சாட்சிகள் இப்போது அடையாளங்களை நடப்பிக்கிறதாக காணப்படுகிறார்கள். உதாரணமாக, அவர்களைக் குறித்து யோவான் சொல்கிறார்: “ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும். அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு.”—வெளிப்படுத்துதல் 11:5, 6அ.
-
-
இரண்டு சாட்சிகளை உயிருக்கு மீண்டெழச்செய்வதுவெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
17. (அ) வறட்சியையும் அக்கினியையும் உட்படுத்திய என்ன சம்பவங்கள் எலியா காலத்தில் நடந்தன? (ஆ) அந்த இரண்டு சாட்சிகளுடைய வாய்களிலிருந்து எப்படி அக்கினி புறப்பட்டது, என்ன வறட்சி உட்பட்டிருந்தது?
17 எலியாவைப் பற்றி என்ன? இஸ்ரவேல் ராஜாக்களுடைய நாட்களிலே, இந்தத் தீர்க்கதரிசி பாகாலை வணங்கும் இஸ்ரவேலர்களின் மீது யெகோவாவுடைய எரிச்சலின் வெளிக்காட்டாக வறட்சியை அறிவித்தார். இது மூன்றரை ஆண்டுகள் நீடித்தது. (1 இராஜாக்கள் 17:1; 18:41-45; லூக்கா 4:25; யாக்கோபு 5:17) பிற்பாடு, அவிசுவாசியான அரசனாகிய அகசியா எலியாவைக் கட்டாயப்படுத்தி, தான் ராஜ்யபாரம் பண்ணும் இடத்துக்கு அவரை அழைத்துவரும்படியாக சேவகரை அனுப்பியபோது இந்தத் தீர்க்கதரிசி, வானத்திலிருந்து அக்கினி வந்து அந்தச் சேவகரை பட்சித்துப்போடும்படி செய்தார். தீர்க்கதரிசியாக அவன் இருக்கும் ஸ்தானத்துக்கு தகுந்த மரியாதையை ஓர் இராணுவ தலைவன் காட்டியபோதுதானே ராஜாவினிடத்திற்கு அவனோடேகூட போக எலியா சம்மதித்தார். (2 இராஜாக்கள் 1:5-16) அதைப்போலவே, கிறிஸ்தவமண்டலத்தில் இருக்கும் ஆவிக்குரிய வறட்சியைக் குறித்து அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் 1914-1918-க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தைரியத்தோடு அவர்களுடைய கவனத்துக்கு கொண்டுவந்தார்கள், மேலும் ‘யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வரும்போது’ கொண்டுவரப்படும் ஆக்கினைத் தீர்ப்பைக் குறித்தும் எச்சரித்தார்கள்.—மல்கியா 4:1, 5, NW; ஆமோஸ் 8:11.
18. (அ) அந்த இரண்டு சாட்சிகளுக்கு என்ன அதிகாரம் கொடுக்கப்படுகிறது, மோசேக்கு கொடுக்கப்பட்டதோடு இது எவ்வாறு ஒத்திருக்கிறது? (ஆ) அந்த இரண்டு சாட்சிகள் எப்படி கிறிஸ்தவமண்டலத்தை அம்பலப்படுத்தினர்?
18 யோவான் அந்த இரண்டு சாட்சிகளைக் குறித்து தொடர்ந்து சொல்லுகிறார்: “அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.” (வெளிப்படுத்துதல் 11:6ஆ) இஸ்ரவேலை விடுவிப்பதற்கு பார்வோனை சம்மதிக்கச் செய்ய தண்ணீர்களை இரத்தமாக மாற்றும் வாதையை உட்பட யெகோவா வாதைகளால் கொடுமையான எகிப்தை தண்டிக்க மோசேயைப் பயன்படுத்தினார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இஸ்ரவேலில் இருந்த பெலிஸ்திய சத்துருக்கள் எகிப்துக்கு விரோதமாக யெகோவா எடுத்த நடவடிக்கைகளை நினைவிற்கொண்டவர்களாக இப்படியாக ஆர்ப்பரித்தார்கள்: “அந்த மகத்துவமான தேவர்களின் [கடவுளின், NW] கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்தரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே [கடவுள் இவரே, NW].” (1 சாமுவேல் 4:8; சங்கீதம் 105:29) மோசே இயேசுவுக்குப் படமாக இருக்கிறார், அவருடைய நாட்களிலிருந்த மதத் தலைவர்களுக்குக் கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை உரைப்பதற்கான அதிகாரத்தையுடையவராய் இவர் இருந்தார். (மத்தேயு 23:13; 28:18; அப்போஸ்தலர் 3:22) முதல் உலக யுத்தத்தின்போது கிறிஸ்துவின் சகோதரர்களாகிய அந்த இரண்டு சாட்சிகள் கிறிஸ்தவமண்டலம் அதன் மந்தைக்குக் கொடுத்துவரும் “தண்ணீர்க”ளின் மரணத்தை விளைவிக்கும் தன்மையை அம்பலப்படுத்தினார்கள்.
-